Pages

Friday, September 9, 2011

சேரன்மகாதேவி மாணவர்களுக்கு கலெக்டர் செல்வராஜ் பாராட்டு

திருநெல்வேலி : தேசிய விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற சேரன்மகாதேவி பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ஜோலாப்பூரில் தேசிய அளவில் நடந்த கால்பந்து டென்னிஸ் போட்டியில் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுப்ரீம் பிளசிங் தங்கப்பதக்கம், தங்ககிருஷ்ணன் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இருவருக்கும் கலெக்டர் செல்வராஜ் பாராட்டு தெரிவித்தார். மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கிரேஸ் அண்ணஹெலினா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம், உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை உடன் இருந்தனர்

Saturday, September 3, 2011

சேரன்மகாதேவி பகுதியில் விதை கிராம பயிற்சி

திருநெல்வேலி:சேரன்மகாதேவி வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.பயிற்சியில் நெல்லை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) குமாரசாமி விதை கிராம திட்டங்கள் பற்றியும், நெல்லை தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடி பற்றியும் கூறினர். சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் திட்டங்கள் பற்றி கூறினார்.ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பரசிவம், துணை வேளாண்மை அலுவலர் நாகூர்மீரான், உதவி வேளாண்மை அலுவலர்கள் பில்லி கிரஹாம், பாலசுப்பிரமணியன், சேவியர், கலா, செல்வி செய்திருந்தனர்.


source dinamalar : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=306345